7 வயதேயாகும் 2-ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவனை, ஆசி ரியை ஒருவரே, மதத்தைக் குறிப்பிட்டு விமர்சித்ததுடன், இந்து மாணவர்களை வைத்து, அந்த முஸ்லிம் சிறுவனை, கன்னத்தில் மாறி மாறி அறையச் செய்யும் வீடியோ, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. நாடு முழுவதும் கடும் கண்டனங்க ளும் எழுந்தன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசி ரியை திராப்தி தியாகி மீது இந்திய தண்ட னைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவு களின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த இரு பிரிவு களுமே ஜாமீனில் வெளிவரக் கூடியவை என்பதுடன், உடனடி கைது நடவடிக்கை யும் தேவைப்படாத பிரிவுகள் ஆகும். இதனால் ஆசிரியை திராப்தி தியாகி கைது செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியை திராப்தி தியாகி நடத்தி வந்த, நேஹா பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியை மூடு வதற்கு அம்மாநில பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய சிறுவன் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸூம் அனுப்பி யுள்ளது.
இதனிடையே, “வீட்டுப்பாடம் செய் யாத மாணவரை, சக மாணவர்களை வைத்து அறையச் செய்தது எனது தவறு தான். ஆனால், அதற்காக வெட்கப்பட வில்லை. ஏனெனில், மாணவர்களிடையே இந்து - முஸ்லிம் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. அனைவரும் எனக்கு ஒன்றுதான்” என்று ஆசிரியை திராப்தி தியாகி கூறியுள்ளார்.
மதச்சாய வழக்கை திசை திருப்பும் விதமாக உத்தரப்பிரதேச பாஜக அரசு முஸ்லிம் மாணவன் (மைனர் என்ப தால்) பற்றிய தகவல் குறித்து வெளி யிட்டதற்காக ஆல்ட் நியூஸ் நிறுவனர் முகமது ஜுபைர் மீது சிறார் நீதிச் சட்டம் பிரிவு 74ன் கீழ் முசாபர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.